மொறட்டுவ பல்கலை மாணவர்களால் யாழ் வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளுக்கு தம்மாலான உதவியாக மொறட்டுவைப் பல்கலைக்கழக 2008 பிரிவைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ரூ600,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை 17.12.2022 அன்று பணிப்பாளர் Dr. சத்தியமூர்த்தி அவர்களிடம் வழங்கி வைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *