104 பயணிகளுடன் கடலில் தத்தளித்த படகு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு!

மியான்மரில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி கடல் மார்க்கமாக பயணித்த படகு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிதுள்ளது.

மியான்மார் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி கடல் மார்க்கமாக 104 பயணிகளுடன் பயணித்த படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரையொதுங்கியது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெத்தலைக்கேணியில் பகுதியில் கரை ஒதுங்கிய குறித்த படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *