நாட்டில் என்ன நடக்கிறது – தெளிவு படுத்த யாரும் இல்லை – சிராந்த அமர்சிங்க.

அன்று முதல் இன்று வரை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை குறித்து தெளிவுபடுத்த யாரும் இல்லை.மக்கள் ஒரு வேளை சாப்பிட கூட இல்லாத நிலையே உள்ளது என Save Freedom அமைப்பின் தலைவர் சிராந்த அமர்சிங்க தெரிவித்துள்ளார்:

நம் நாட்டிற்கான ஒரு எதிர்காலம் இல்லை.யாரும் உறுதியாக கூற முடியுமா. நம் நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவில்லை. உறுதி அற்ற வாழ்க்கை காணப்படுகிறது

அங்கு பெசில் ராஜபக்ஷ அவர்கள் கையில் உள்ளது smart watch. ஆனால் சரியான முறையில் ஒரு தொலைபேசி பாவிக்க தெரியாது.பாருங்கள்  சமூக வலைத்தளங்களில் மக்களின் கோரிக்கையை.
தம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து போராடுகின்றார்கள். நாட்டிற்கு மாற்றம் அவசியம் என்று கோருகிறார்கள் ஆனால் அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 ரணில் பிரதமராக வரும் போது, ரணில் ராஜபக்ஷ என்று நான் சரியாகத் தான் அன்று முதலில் பெயர் வைத்தேன்.நான் அன்று கூறியது சரி. இன்று மஹிந்த ராஜபக்ஷ முடியாத நிலையில்  ரணில் ஆட்சிக்கு வருகிறார். ரணில் ஆட்சிக்கு வர முடியாத நிலையில் மஹிந்த ஆட்சியிற்கு வருகிறார். மக்களும் யோசிக்காமல் வாக்குகளை வழங்குகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *