
அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 100 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்ற நிகழ்வில் பங்குபற்றக் கிடைத்தது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக முக்கியமானதொரு உரையை முஸ்லிம் சமூகத்தை விளித்து ஆற்றியிருந்தார். இந் நிகழ்வில் ஆயிரக் கணக்கான உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர்.





