இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு! – தற்போது வெளியான அறிவிப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மறுதினமும் (சனிக்கிழமை), பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் திகதியும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

நாளை மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்தில் கடைகளை மூடியதன் பின்னர், 6ஆம் திகதி மதுபானக் கடைகள் திறக்கப்படும் நேரத்தில் அவற்றை மீண்டும் திறக்குமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *