பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட ஆட்சியை அமைப்போம்- அங்கஜன் உறுதி!

பல அபிவிருத்திகளை செய்யவேண்டிய பிரதேசமாக தீவகம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தீவகத்தில் போட்டியிடுகின்ற  சுதந்திர கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல் செயற்றிட்டமும் வேலணையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவுப்பகுதி மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம். தீவுப்பகுதி மக்கள் பல துன்ப துயரங்களை சந்தித்துள்ளார்கள்.

பல அபிவிருத்தியை செய்யவேண்டிய பிரதேசமாக தீவகம் காணப்படுகிறது. நாம் இந்த தேர்தல் மூலம் வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம் என்றார் .

அத்துடன் தீவக மக்கள் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி சார் பிரச்சினைகளில் பிரதேச சபைகளால் தீர்க்கவேண்டியதை செய்து முடிக்கும் வல்லமை கொண்ட ஆட்சியை பிரதேச சபைகளில் அமைப்போம் என வேட்பாளர்கள் உறுதிபூண்டனர்.

Leave a Reply