10 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் இறக்குமதியாகிறது

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ காஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், எரிவாயு சிலிண்டர்கள் இறக்குமதியை இடைநிறுத்தியது.

இதனால் நுகர்வோர்கள் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினால் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக 10 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய லிட்ரோ காஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எனினும் கடந்த 7 மாதங்களில் புதிய எரிவாயு கொள்கலன்கள் எவையும் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply