100 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்புள்ள கடையொன்றின் உரிமையாளரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
The post 100 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது! appeared first on உதயன் | UTHAYAN.
