வேல்ஸில் பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படும்!

வேல்ஸில் பெரும்பாலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படும்.

இதன்படி, உட்புறத்தில் சந்திக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை விதிகள் தளர்த்தப்படும். இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் பணியிடங்களுக்கான சமூக தொலைதூர சட்டங்கள் நீக்கப்படும்.

ஆனால், முகக்கவசம் இன்னும் கடைகள், உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், பொதுப் போக்குவரத்தில் அணிய வேண்டுமென என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில், ‘தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை, இந்த வைரஸை கட்டுக்குள் வைத்திருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நீங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், வெளியில் சந்திப்பது உட்புறத்தை விட பாதுகாப்பானது.

புதிய காற்றை உட்புற இடங்களுக்குள் விடுங்கள். லேசான அறிகுறிகளுக்காகவும் சோதனை செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும் போது தனிமைப்படுத்தவும்’ என கூறினார்.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடங்கி 15 மாதங்களுக்குப் பிறகு மற்றும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு பிறகு இந்த முடிவினை வேல்ஸ் அரசாங்கம் நேற்று (வியாழக்கிழமை) இரவு உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *