குறைந்தபட்ச ஊதியம் 16,000 ரூபாயாக அதிகரிப்பு

ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

,வ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரத்தில் ,ருந்து 16 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016 ஜனவரி முதல் 10 ஆயிரம் ரூபா குறைந்தபட்ச ஊதியம் அமுலுக்கு வந்தது.

தனியார் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 16 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.

,ந்த தொகைக்கமைய, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஒத்துழைப்பும் ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *