ரணிலைப்போன்று சஜித் எவருக்கும் முட்டுகொடுக்கமாட்டார்:தொங்கவும் மாட்டார்- கேலி செய்யும் ரஞ்சித்.!

வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

எனவே நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் சஜித் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைக்கும் எனவும், குருநாகல் மாநகரசபையின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி கிடைத்ததாகவும் இதன்படி அந்த மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரே நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனோ, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்துப் பயணிக்கபோவதில்லை.எவருக்கும் நாம் முட்டுக்குக் கொடுக்கப்போவதில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மொட்டுக்குக் கட்சிக்கு முட்டுக்கொடுத்து, அந்த கட்சியில் தொங்கிக்கொண்டு இருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *