நாளை, மட்டகளப்பு நோக்கிய பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு! !

வடகிழக்கு தழுவிய பூரண கர்தாலுடன் நாளை காலை 9 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய பேரணி இடம்பெறவுள்ளது

இந்நிலையில் நாளை காலை வர்த்தக நிலையங்கள் ,போக்குவரத்து சேவையிலீடுபவோர்,திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் கர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில் நாளைய தினம் பல்கலைக்கழக மாணவர்கள் பேரெழுச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதே நிலையில் தமது வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply