ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பிரசார மேடைகளில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பில் ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இன்றைய 75வது சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்பதும் நிச்சயமற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

