யாழில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் விபரம்

யாழில் இதுவரை (நேற்று வரை) 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர் கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையையேனும் பூர்த்தி செய்துள்ளனர்.

இது யாழில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையின் 75 சதவீதமாகும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதோடு, மேலும் 50 ஆயிரம் பேர் அடுத்த வாரம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெறவுள்ளனர்.

யாழில் இரண்டு கட்டங்களாக தலா 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது 3 ஆம் கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்படுகிறது.

இதன்படி நேற்று (06) மாத்திரம் 7 ஆயிரத்து 866 பேர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

நாளை (07) தொடக்கம் மூன்று நாட்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *