யாழ்ப்பாணம் – குருநகர் ஐந்துமாடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் மீன்பிடி வலையினை காயவைத்துக் கொண்டிருந்த இளைஞர் மீது காரொன்றில் வந்திறங்கிய குழுவினால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது காயமடைந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
பாசையூர் – ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.