கொவிட் தொற்றுக்கு ஆசிரியை ஒருவர் பலி

பதுளையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியை நேற்றையதினம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக பதுளை மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும்  உயிரிழந்தவர் பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றும் 49 வயதான சாந்திமலர் என அடையாளம் காணப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *