உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய இலக்கு: சீனா திட்டம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச தடுப்பூசி ஒத்துழைப்பு மாநாட்டில் கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதனை உறுதிப்படுத்தினார்.

அத்துடன், சீனா இதுவரை 770 மில்லியன் டோஸ்களை மற்ற நாடுகளுக்கு விநியோகித்ததனையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கு புதிய 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்பாட்டையும் ஜனாதிபதி அறிவித்தார்.

சீனா இதுவரை 1.7 பில்லியன் அளவுகளை 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கு நிர்வகித்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.

உலக சுகாதார அமைப்பு. சமீபத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், அதிக நாடுகளில் முதல் கொவிட் அளவுகள் கிடைக்குமுன் பணக்கார நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பூஸ்டர்களை (மூன்றாவது டோஸ்) வழங்குவதை கைவிடுமாறு நிறுவனம் அழைப்பு விடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *