இலங்கையர்களின் தானத்தால் உலகை பார்க்கும் பெருமளவான வெளிநாட்டவர்கள்..! – வெளியான தகவல்

இலங்கைப் பிரஜைகள் செய்த கண் தானம் காரணமாக 87,870 வெளிநாட்டவர்கள் பார்வையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை கண் தான சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதரராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

தானம் செய்யப்பட்ட கண்களைக் கொண்டு இலங்கையைச் சேர்ந்த 58,260 பேர் பார்வையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 21 லட்சம் பேர் சுய விருப்பின் அடிப்படையில் கண் தானம் செய்யும் உறுதிமொழியை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்து குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் கண்களை தானமாக பெற்றுக்கொள்ள கண் தான சங்கத்தின் கிளைகள் நாடு முழுவதும்  இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கண் தானம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டாலும் கண்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள 30,000 முதல் 40,000 ரூபா வரையில் செலவாகின்றது என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கண்களை வழங்கும் போது 50,000 முதல் 80,000 ரூபா வரையில் செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *