10 மாவட்டங்களிற்கு அவசர வானிலை எச்சரிக்கை!

இடியுடன் கூடிய பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply