செல்வச்சந்நிதி ஆலய சூழலில் இருவருக்கு கொரோனா

செல்வச்சந்நிதி ஆலயத்தியில் வியாபாரம் செய்யும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பொருந்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய சூழலில் கச்சான் வியாபாரிகள் உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துடன் தொடர்புடைய 75 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 25 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave a Reply