60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

<!–

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. – Athavan News

மேல் மாகாணத்தில் வசிக்கும் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாதவரகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையஇ நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற்பதிவினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *