தாய்க்கட்சியான தமிழரசு கட்சியை வளர்த்தெடுக்கவேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு- கோடீஸ்வரன் கருத்து!

தமிழரசு கட்சி என்பது ஏனைய கட்சிகளை விடவும் முன்னோடியான கட்சி எனவும் எனவே இந்த தாய்க்கட்சியை வலுப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை க.கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த தமிழரசு கட்சியை வளர்த்தெடுக்கவேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தாய்க்கட்சி ஒரே நோக்கத்துடன் தமிழர்களின் விடிவிற்காக போராடுகின்ற கட்சி என்றும் க.கோடீஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.தமிழுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு கட்சியாக தமிழரசு கட்சியயே உள்ளதாகவும் எனவே இனை பலப்படுத்தவேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *