மாபெரும் தமிழர் எழுச்சி பேரணி – குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தமிழர் எழுச்சிப் பேரணி இன்று இரவு 8.00 மணியளவில் மூதூர் -குமாரபுரத்தை வந்தடைந்தது.

இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு  சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் அங்கு  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து ஆரம்பமான இப்பேரணி  திருகோணமலையின் எல்லைப்பகுதியான வெருகல் பகுதியில் இன்றிரவு தரித்து நிற்கின்றது.

வெருகலில் தரித்து நிற்கும் பேரணி குழுவினர் நாளை செவ்வாய்கிழமை காலை வெருகலிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *