மாணவர்களின் மாபெரும் எழுச்சிப் பேரணியை தடுப்பதற்கு புலனாய்வாளர்கள் முயற்சி!

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது.

புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரை வைத்து இந்த சதித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

பேரணியில் வருகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு பேரணியை தடுக்கும் வகையிலேயே குறித்த சதித்திட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மற்றும் அங்குள்ள ஒருசில தமிழ் மாணவர்களை வைத்தும் இந்த பேரணியை முறியடிக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் நாளை நான்காவது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ள வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முறியடிப்பதாக போலியான தோற்றப்பாட்டை உருவாக்கவே குறித்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *