வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை குழப்ப பாரிய திட்டம் – அச்சநிலையையும் மீறி முன்னேறும் மாணவர்கள்!

நான்காவது நாளான இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ள வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழப்புவதாக போலியான தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது

பேரணியுடன் வருகின்றவர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு பேரணியை தடுக்கும் வகையிலேயே குறித்த சதித்திட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வந்தாறு மூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மற்றும் அங்குள்ள ஒருசில தமிழ் மாணவர்களை வைத்தும் இந்த பேரணியை குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *