கொத்து மற்றும் பிறைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை உயர்வு? வெளியான அறிவிப்பு

உணவகங்களில்  விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை உயர்வு காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் எரிவாயு விலை உயர்வால்  உணவுப் பொருட்களின் விலையை, விரும்பாவிட்டாலும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கொத்து, பிறைட் ரைஸ், பரோட்டா, ரோல்ஸ், பற்றிஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்த முயற்சிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  

Leave a Reply