பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம் – கொழும்பில் பதற்றம்! – குவிக்கப்பட்ட பொலிசார்

13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் தற்போது பிக்குமார் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வருகின்ற பகுதியில் சற்றுமுன் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தேரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பிக்குமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *