கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து வீதியை மறித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பிரதான வீதியை மறித்து ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் போராட்டம் நடத்த தடை உத்தரவு பெற்று வந்த பொலிஸாரை “ஊ” கூச்சலிட்டு போராட்டக்காரர்கள் விரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.