தவறான வங்கிக் கணக்கு: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவிருந்த பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தவறான வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவிருந்த 1300 மில்லியன் ரூபாய் பணம் மீள அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு ஹெக்டேருக்கு 10,000 ரூபாய் வீதம் 8 பில்லியன் ரூபாயும் இரண்டு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவறான கணக்கு இலக்கங்கள் காரணமாக 1200 மில்லியன் ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் தவறுகளினால் விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதது தொடர்பாக விசாரணை இடமபெருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *