யாழில் வர்த்தகர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்…!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இன்று முற்பகல் நல்லூர் சட்டத்தரணி ஆலயத்திற்கு முன்பாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *