அதிகாரப்பகிர்வு தொடர்பாக மொட்டின் நிலைப்பாட்டை சூசகமாக தெரிவித்த மஹிந்த!

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, 

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய காணி அதிகாரங்களை வழங்க முடியும் என்று ரணில் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் எழுப்பிய கேள்வி அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *