ஜனாதிபதி முதலில் சிங்கள மக்களுடன் ஒரு இணக்கப்பட்டை பெற்றுக்கொண்ட பின்னர் தமிழ் தரப்பினரோடு அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்தைகளில் ஈடுபடுதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்துள்ளதுடன் அதனோடு இணைந்து இருந்த கட்சிகள் என்ற வகையில் நாம் அதில் பங்கெடுத்துக் கொண்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்து கொள்ளாது எனினும் அதனோடு இணைந்த ஏனைய பங்காளி கட்சிகள்
இந்த அமர்வில் கலந்து கொள்வதில் ஆட்சேபனை கிடையாது என எமக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கிணங்கவே நாம் கலந்து கொண்டோம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தாது
சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுதான் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிங்கள பெரும்பான்மை மக்களின் கைகளிலேயே அதற்கான தீர்வு உள்ளது இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் தொடர்பில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டார். அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாம் அதனை வரவேற்போம்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேவேளை 13வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அத்துடன் இலங்கையில் உள்ள நான்கு சமூகத்தை சேர்ந்த மக்களுடன் மலையக மக்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கது.
அந்த வகையில் எம்மை மலையக மக்கள் என அழைப்பதையே நாம் விரும்புகின்றோம்.