இயற்கை விவசாயத்தை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சி! ஷசீந்திர ராஜபக்ஷ

இயற்கை விவசாயத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயத்திற்கு நாட்டை கொண்டு செல்வது தனித்து செய்யக்கூடிய ஒன்றல்ல என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு இது தொடர்பானபோதிய தெளிவை வழங்குவதில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலத்திற்கு தீங்கு விளைவிக்காத உரத்தை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் போகங்களில், இயற்கை விவசாயத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், முப்படையினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளதீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *