தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் பாதிப்பு!

<!–

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் பாதிப்பு! – Athavan News

பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாணந்துறை – மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தனியார் பேருந்து ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *