விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி

விலங்குகள் நலச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், விலங்குகள் நல சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி விலங்குகள் நலச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையின் சட்ட வரைவாளரால் உருவாக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *