பட்டாசு வெடித்ததில் யானைக் குட்டியொன்று உயிரிழப்பு

பட்டாசு வெடித்ததில் காயங்களுக்கு உள்ளாகிய யானை நிலையில் யானைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளது.

புத்தளம் தோனிகல வனப்பகுதியில் காயங்களுக்கு உள்ளாகிய யானைக் குட்டியொன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளைக் கொள்வதற்கு பூசனிக்காய்களில் வைக்கப்பட்ட பட்டாசை குறித்த யானை உற்கொண்டமையினால் பட்டாசு வெடித்து, காயங்களுக்குள்ளாகியிருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

குறித்த யானை இன்று பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் த்ந்திவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *