
ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பு துறைமுக நகர கடற்கரை பகுதிக்குச் செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை!