தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா தொற்று ஏற்படும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் முற்றாக தொற்று ஏற்படாது என்று கூறமுடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர்ஹேமந்த கேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நம் நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல தடுப்பூசி பெற்றால் கொரோனா தொற்றை முற்றாக குணப்படுத்த முடியும் என உறுதியாக கூற முடியாது.

தடுப்பூசி வழங்குவது நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தடுப்பூசி வழங்கியவரிற்கு கொவிட் தொற்று ஏற்படாது என்று இல்லை.

ஆனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். தடுப்பூசி பெற்று கொண்ட ஒருவரிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் குணப்படுத்துவது இலகு.

டெல்டா, ஒமிக்ரோன் போன்ற வைரஸ்கள் நம் நாட்டில் தற்போது காணப்படுகிறது.
அதன் பரவல் அதிகரிப்பு நமது கையிலேயே உள்ளது.

ஏன் என்றால் டெல்டா வைரஸ் உலகிலே பரவி நீண்ட நாட்களின் பின்னர் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் ஒமிக்ரோன் வைரஸ் உலகிலேயே கண்டு பிடிக்கப்பட்டு இரண்டாம் வாரத்தில் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே வைரஸின் பரவல் வீதம் அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *