எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் – அரசாங்கம்

எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்பது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலம் தெரிவித்த அவர் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைய மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே முன்நடவடிக்கையாக பொதுமக்களை அறிவுறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *