
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டார்.
உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் அகிலதாசினால், நாளைய தினம் சஜித் பிரேமதாசாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசாக பிள்ளையார் உருவப்படம் ஒன்றை வழங்கியுள்ளார்.