பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு

திம்புள்ள – பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று காலை, சுமார் இரண்டடி நீளமான சிறுத்தை ஒன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.

குறித்த சிறுத்தை தொடர்பாக கம்பளை வனஜீவராசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவிரவாக நாட்டுக்கு மக்களுக்கு தடுப்பூசி போடத்தயாராகும் அரசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *