புர்கினா பாசோவில் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டம் – படையினர் கைது

ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சதித்திட்டம் வகுத்த குற்றச்சாட்டில் எட்டு ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புர்கினா பாசோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்கத்தை விமர்சனம் செய்த பிரபல முன்னாள் இராணுவத் தளபதி மொஹமட் இம்மானுவேல் ஸௌங்ரானாவும் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இறுதியாக புர்கினா பாசோவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் நாடு கடத்தப்பட்ட ஜனாதிபதியான பிளேஸ் கம்போரேவுக்கு விசுவாசமான இராணுவ படை அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *