பாடசாலை மாணவர்களுக்கான இம்முறை சீருடை துணி வழங்கப்படுமா?

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடை துணிகள் வலய கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளர்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சவால்கள் இருந்தபோதிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களில் பாடசாலைகள் நடத்தப்படாவிட்டாலும் 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் மற்றும், சப்பாத்து வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்திற்கு தேவையான துணிகளில் 68 வீதம், ஏற்கனவே வலய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள சீருடைகள் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் வலய அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.

சில தொழிற்சங்க பிரதிநிதிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மையப்படுத்தி, குறுகிய அரசியல் ஆதாயங்களை அடைய முற்பட்டாலும் அவ்வாறான குறுகிய நோக்கங்களை அடைய இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *