பொலிஸ் துறையை அரசியல் மயமாக்க இடமளிக்கப்போவதில்லை! சரத் வீரசேகர

பொலிஸ் துறையை அரசியல் மயமாக்க இடமளிக்கப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 105 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளோடு இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறந்த பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் ஆராய்ந்து சிறந்த அதிகாரிகளைத் தெரிவு செய்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

அதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டு பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பரிந்துரைக்கிணங்கவே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தாம் பணிபுரியும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களுக்கான நலன்புரி சேவைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டா அரசு பெயிலியர்! யாழில் சஜித் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *