இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை – சஜித்

இலங்கைக்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்று (புதன்கிழமை) தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சஜித் பிரேமதாச, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் புதிய ஆட்சியாளர்கள் இலங்கைக்கு தேவை என தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேசிய அவலத்திலிருந்து விடுபடுவதற்கு பல விடயங்களைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

எவ்வாறாயினும், தேசத்தை ஒரு திறமையான தலைவரிடம் ஒப்படைப்பதே மிக முக்கியமானது என்றும் எனவே தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் அவர்; வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *