
ஆதர்சம் பவுண்டேசனால் முல்லைத்தீவில் தைப்பொங்கலை முன்னிட்டு 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஆதர்சம் பவுண்டேசனால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான்,கரைதுறைப்பற்று, துணுக்காய் ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கே இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வாக ஒட்டுசுட்டான் ஒளிரும் வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் வைத்து 40 பேருக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
இந்த நிகழ்வில் ஆதர்சம் பவுண்டேசன் நிறுவுணரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான லக்சயன் முத்துக்குமாரசாமி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன், ஜக்கிய மக்கள் சக்தியின் றிசாம் ஜமால்டின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்
தொடர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு மாங்குளம் மல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் 250 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.




