‘பகிர்ந்து உண்போம்’ தொனிப்பொருளில் முல்லைத்தீவில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு

பகிர்ந்து உண்போம் எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து உண்போம் எனும் தொனிப்பொருளில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு துணுக்காய், ஒட்டுசுட்டான்,கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது

அந்தவகையில் முள்ளியவளை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 பேருக்கான பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில் முள்ளியவளையில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சுகிர்தன் முல்லைத்தீவு மாவட்ட அந்தணர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்

இதேவேளை நேற்று மாந்தை கிழக்கு துணுக்காய் ,ஒட்டுசுட்டான் கரைதுறைப்பற்று பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 400 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *