
யாழ்ப்பாணத்தில் முத்தமிழ் விழாவை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாநகர சபை தீர்மானித்துள்ளதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் விழா நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு சபையிலிருந்து விருந்தினர்கள் அழைத்து செல்லப்படுவர்.
மூன்று அரங்குகளாக நிகழ்வுகள் நடைபெறும்.ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்பதே எமது ஆசை.
எதிர் காலத்தில் மூன்று நாட்கள் இந்த நிகழ்வை நடத்துவது சிறந்தது.இம்முறை ஒரு நாள் மட்டுமே விழா நடைபெறும்.
காலை 9.30 மணி முதல் ,இரவு 10 மணி வரை இயல், இசை, நாடகம் ஆகிய அரங்க நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.