
இலங்கையில் புற்று நோய் எதிர்ப்பு ஔடத உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக, இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புற்று நோய் எதிர்ப்பு ஔடத உற்பத்தி அமைப்புகள் 3 ஹொரன பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
இவ் அமைப்புகளை உருவாக்குவதற்கு 10 பில்லியன் செலவு செய்யப் படவுள்ளது.
இவை அனைத்தும் அரச ஔடத அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளது.
இவ் அமைப்பின் ஊடக புற்று நோயிற்கான மருந்துகள் உற்பத்தி செய்ய பட உள்ளன என தெரிவித்துள்ளார்.