வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் வெளியான தகவல்!

வெள்ளவத்தை, கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய சடலம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடையது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனை பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவரின் சகோதரர் பொலிஸாருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

54 வயதான குறித்த நபர், மனநோய் காரணமாக நீண்டநாட்கள் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் என தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *